வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டி
நடு ரோட்டில், காலில் குருதியுடன் துடித்துகொண்டிருந்தது...
குட்டியை காப்பாற்ற எந்த வாகனமும் நிற்கவில்லை!
இரக்கமற்ற மனிதர்கள், இதயமற்ற ஜீவன்கள் சமூகத்தில்
பெருகிவிட்டனரே, வேதனை பட்டது மனம்!
மருகிக் கொண்டிருக்கும்போதே
என்னுடைய காரும் நாய்க்குட்டியை கடந்திருந்தது!!
No comments:
Post a Comment