தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டபோது மூவரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. குற்றவாளிகள் இன்று விடுவிக்கபடுகின்றனர், முறையான சாட்சிகள் இல்லாததால்!! ஸ்டாலினுக்கு ஆதரவாக எழுதியதால்தான் அழகிரியின் விசுவாசிகள் இந்த குற்றசெயலை செய்தனர் எனபது ஊரறிந்த விஷயம். குடும்பங்கள் ஒன்றானவுடன் குற்றங்கள் மறக்கப்பட்டன. சட்டங்களும் வளைக்கப்பட்டன. சாட்சிகள் பல்டியடித்தன. ரௌடிகள் விடுதலையாகின்றனர். என்ன ஒரு நியாயமான ஆட்சியை கலைஞர் நடத்துகிறார் என்பதற்கு இதைவிட ஒரு உன்னத உதாரணம் நமக்கு தேவைப்படும் என்றா நினைக்கிறீர்கள்??
மக்களின் மனசாட்சியை, அவரின் மனசாட்சியை போன்று மலினமாய் எடைபோட்டுவிடுகிறார் என்றுதான் எண்ணதோன்றுகிறது!! அருகிலிருக்கும் இலங்கை சென்று மாண்டு கொண்டு இருந்த தமிழரை காப்பதை விட, தன் குடும்பத்துக்காக நெடுந்தொலைவில் உள்ள டெல்லிக்கு சென்ற மாமனிதரல்லவா அவர்!! தன்னலமற்ற திராவிட இயக்கத்தின் ஆணிவேரை பற்றி வளர்ந்துவிட்டு இன்று குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி, தன் மானம் இழந்து நம்மை ஏமாற்றி வாழும் இவருக்கும், இவரைப்போன்ற கள்ளத் தலைவர்களுக்கும் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. மக்களை அவர்தம் உயிர்களை கிள்ளுக்கீரையாய் நினைத்து உருவாகும் அரசியல் தலைவர்களை நாம் இனம் கண்டு முளையிலேயே கில்லி விடவேண்டும்.
கல்வி அறிவும், அரசியல் விழிப்புணர்வும் இத்தகைய கொடுமைகள், அநீதிகள் மீண்டும் மீண்டும் நடப்பதை வரும் காலங்களில் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சாமானியனின் விருப்பம்!!