நீண்ட நேர இரவு பயணம்,
உடல் வருடும் குளிர் காற்று,
இதயம் சுமக்கும் உன் நினைவுகள்,
அலுக்காமல் செல்லுமா?
நம் வாழ்க்கை பயணமும்??
கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!
எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.
தோழர்கள்
Monday, 23 August 2010
செல்லத் திருடி!
ஹலோ செல்லத் திருடி!
இமை திறந்த நேரத்தில்
என்னுள் புகுந்து களவாடி விட்டாய்!!
நான் பத்திரமாய் இருக்கிறேனா??
இமை திறந்த நேரத்தில்
என்னுள் புகுந்து களவாடி விட்டாய்!!
நான் பத்திரமாய் இருக்கிறேனா??
Monday, 16 August 2010
திருமணம் சொர்க்கத்தில்....
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்!
சரிதான்! அதற்கு பிறகு
வாழ்க்கைதான் நரகமாகிவிடுகிறது!!
சரிதான்! அதற்கு பிறகு
வாழ்க்கைதான் நரகமாகிவிடுகிறது!!
Sunday, 15 August 2010
சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!
தன்னலமற்ற தலைவர்களை காணவில்லை
மக்களாட்சியில் தினமும் மக்களே பலியிடப்படுகிறார்கள்
சாதியம் குருதி வார்த்து வளர்க்கப்படுகிறது
மத வெறியர்கள் தேர்தலில் வெற்றி கொள்கிறார்கள்
பழங்குடியினர் வேரோடு அகற்றப்படுகிறார்கள்
பசியில் வாடுபவர்களும், விலைவாசியும் அதிகரித்தவாறே!!
மன்னர்களின் ஆட்சியை அகற்றி விட்டோம்
அங்கே இப்போது குடும்பங்கள் குடியேறிவிட்டன
வானளாவிய கட்டிடங்களும், பெரிய வானூர்தி நிலையங்களும்
உலகிலேயே பெரிய பணக்காரர்களும் இந்தியாவில் இருக்கலாம்!
அதற்காகவெல்லாம் சுதந்திர தினத்தை எண்ணி
என்னால் மகிழ்ச்சி கொள்ள முடிவதில்லை!!
எளிய மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படாத வரை,
அவர்களின் உரிமைகள் நிலை நிறுத்தப்படாத வரை,
சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!
மக்களாட்சியில் தினமும் மக்களே பலியிடப்படுகிறார்கள்
சாதியம் குருதி வார்த்து வளர்க்கப்படுகிறது
மத வெறியர்கள் தேர்தலில் வெற்றி கொள்கிறார்கள்
பழங்குடியினர் வேரோடு அகற்றப்படுகிறார்கள்
பசியில் வாடுபவர்களும், விலைவாசியும் அதிகரித்தவாறே!!
மன்னர்களின் ஆட்சியை அகற்றி விட்டோம்
அங்கே இப்போது குடும்பங்கள் குடியேறிவிட்டன
வானளாவிய கட்டிடங்களும், பெரிய வானூர்தி நிலையங்களும்
உலகிலேயே பெரிய பணக்காரர்களும் இந்தியாவில் இருக்கலாம்!
அதற்காகவெல்லாம் சுதந்திர தினத்தை எண்ணி
என்னால் மகிழ்ச்சி கொள்ள முடிவதில்லை!!
எளிய மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படாத வரை,
அவர்களின் உரிமைகள் நிலை நிறுத்தப்படாத வரை,
சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!
Friday, 13 August 2010
ஆண்கள் விற்பனைக்கு!!
களியக்காவிளை!!
கேரளமும், தமிழும் உறவாடிக்கொண்டிருக்கும் பூமி
எங்கெங்கிலும் போர்த்தியிருக்கம் பசுமை,
வீடுதோறும் கிணற்றில் குடிநீர்,
சுருங்க சொன்னால், அது சொர்க்கத்தின் சாயல்!!
மலர்ச்சியான பகுதிதான், எனினும் மகிழ்ச்சி மங்கிப்போயிருந்தது!
கல்வியில் வேள்வி கண்டபோதிலும், அங்கே கவலை குடியிருந்தது!!
வரதட்சணை வாழ்க்கை முறையாய் மாறியதால்
சோகங்களால் மக்கள் சோர்ந்து போயினர்!
தற்காலிகமாக மூவாயிரம் மாத ஊதியம் பெரும் ஆடவனுக்கு
ஏழு லகரமும் கொடுத்து திருமணமும் செய்ய வேண்டியது
பெண் வீட்டாரின் கடைமையாய் போனது!
கல்வி அறிவை மழுங்க செய்ததோ?
ஆண்கள் வெட்கம் கெட்டுப் போயினரோ?
சாக்கடையாய் மாறிக்கொண்டிருக்கும் சமூகம்
இனி யாரால் சுத்தம் செய்ய முடியும்?
தனி மனிதர்களின் மன மாற்றங்கள்
இந்த மானங்கெட்ட முறையை தவிடு போடியாக்கட்டும்!!
மனித குள்ள நரிகளின் குரல் வளையை நெரிக்கட்டும்!!
அப்போது மனிதம் செழிக்கும்! உலகம் மகிழும்!!
கேரளமும், தமிழும் உறவாடிக்கொண்டிருக்கும் பூமி
எங்கெங்கிலும் போர்த்தியிருக்கம் பசுமை,
வீடுதோறும் கிணற்றில் குடிநீர்,
சுருங்க சொன்னால், அது சொர்க்கத்தின் சாயல்!!
மலர்ச்சியான பகுதிதான், எனினும் மகிழ்ச்சி மங்கிப்போயிருந்தது!
கல்வியில் வேள்வி கண்டபோதிலும், அங்கே கவலை குடியிருந்தது!!
வரதட்சணை வாழ்க்கை முறையாய் மாறியதால்
சோகங்களால் மக்கள் சோர்ந்து போயினர்!
தற்காலிகமாக மூவாயிரம் மாத ஊதியம் பெரும் ஆடவனுக்கு
ஏழு லகரமும் கொடுத்து திருமணமும் செய்ய வேண்டியது
பெண் வீட்டாரின் கடைமையாய் போனது!
கல்வி அறிவை மழுங்க செய்ததோ?
ஆண்கள் வெட்கம் கெட்டுப் போயினரோ?
சாக்கடையாய் மாறிக்கொண்டிருக்கும் சமூகம்
இனி யாரால் சுத்தம் செய்ய முடியும்?
தனி மனிதர்களின் மன மாற்றங்கள்
இந்த மானங்கெட்ட முறையை தவிடு போடியாக்கட்டும்!!
மனித குள்ள நரிகளின் குரல் வளையை நெரிக்கட்டும்!!
அப்போது மனிதம் செழிக்கும்! உலகம் மகிழும்!!
சே! என்ன மனிதர்கள்!!
வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டி
நடு ரோட்டில், காலில் குருதியுடன் துடித்துகொண்டிருந்தது...
குட்டியை காப்பாற்ற எந்த வாகனமும் நிற்கவில்லை!
இரக்கமற்ற மனிதர்கள், இதயமற்ற ஜீவன்கள் சமூகத்தில்
பெருகிவிட்டனரே, வேதனை பட்டது மனம்!
மருகிக் கொண்டிருக்கும்போதே
என்னுடைய காரும் நாய்க்குட்டியை கடந்திருந்தது!!
நடு ரோட்டில், காலில் குருதியுடன் துடித்துகொண்டிருந்தது...
குட்டியை காப்பாற்ற எந்த வாகனமும் நிற்கவில்லை!
இரக்கமற்ற மனிதர்கள், இதயமற்ற ஜீவன்கள் சமூகத்தில்
பெருகிவிட்டனரே, வேதனை பட்டது மனம்!
மருகிக் கொண்டிருக்கும்போதே
என்னுடைய காரும் நாய்க்குட்டியை கடந்திருந்தது!!
குழந்தை தொழிலாளர்
நேற்று தினமணியில, s.விஜயா என்பவர் வேலைக்கு செல்லும் சிறார்கள் கல்வி கற்பது அவசியம் என எழுதி இருந்தார். அதை முதலாளிகளே செய்திடவேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.நியாயமான கருத்துதான் எனினும், அது நடைமுறையில் சாத்தியமா என்பது ஆராயப்படவேண்டிய விஷயம். குழந்தைகள் வேலைக்கே செல்ல கூடா து என்ற நிலைப்பாட்டை உறுதியாக எடுப்பதுதான் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடிவான செயல்பாடாக இருக்கும் என நம்புகிறேன். காரணங்கள்..
1. வேலையும் செய்து கொண்டு, கல்வியும் கற்பது மிகவும் கடினமான விஷயம்.
2. முதலாளிகள், வேலை செய்யும் குழந்தைகளுக்கென செலவு செய்து கல்வியை புகட்டுவார்கள் என்பது நகைப்புக்குரிய விஷயம்.
சட்டங்களை முறையாக பயன்படுத்த தவறும் தொழில் ஆய்வாளர்களும், குழந்தைகளை பணியில் அமர்த்தும் குரூர முதலாளிகளும் மாறும் வரை நாம் கனவுகளைத்தான் காண முடியும். ..."நம் நாட்டில் குழந்தைகள் யாரும் வேலை செய்யவில்லை" என்று!!
1. வேலையும் செய்து கொண்டு, கல்வியும் கற்பது மிகவும் கடினமான விஷயம்.
2. முதலாளிகள், வேலை செய்யும் குழந்தைகளுக்கென செலவு செய்து கல்வியை புகட்டுவார்கள் என்பது நகைப்புக்குரிய விஷயம்.
சட்டங்களை முறையாக பயன்படுத்த தவறும் தொழில் ஆய்வாளர்களும், குழந்தைகளை பணியில் அமர்த்தும் குரூர முதலாளிகளும் மாறும் வரை நாம் கனவுகளைத்தான் காண முடியும். ..."நம் நாட்டில் குழந்தைகள் யாரும் வேலை செய்யவில்லை" என்று!!
Subscribe to:
Posts (Atom)