நேற்று தினமணியில, s.விஜயா என்பவர் வேலைக்கு செல்லும் சிறார்கள் கல்வி கற்பது அவசியம் என எழுதி இருந்தார். அதை முதலாளிகளே செய்திடவேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.நியாயமான கருத்துதான் எனினும், அது நடைமுறையில் சாத்தியமா என்பது ஆராயப்படவேண்டிய விஷயம். குழந்தைகள் வேலைக்கே செல்ல கூடா து என்ற நிலைப்பாட்டை உறுதியாக எடுப்பதுதான் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடிவான செயல்பாடாக இருக்கும் என நம்புகிறேன். காரணங்கள்..
1. வேலையும் செய்து கொண்டு, கல்வியும் கற்பது மிகவும் கடினமான விஷயம்.
2. முதலாளிகள், வேலை செய்யும் குழந்தைகளுக்கென செலவு செய்து கல்வியை புகட்டுவார்கள் என்பது நகைப்புக்குரிய விஷயம்.
சட்டங்களை முறையாக பயன்படுத்த தவறும் தொழில் ஆய்வாளர்களும், குழந்தைகளை பணியில் அமர்த்தும் குரூர முதலாளிகளும் மாறும் வரை நாம் கனவுகளைத்தான் காண முடியும். ..."நம் நாட்டில் குழந்தைகள் யாரும் வேலை செய்யவில்லை" என்று!!
No comments:
Post a Comment