உன் பொக்கை வாய் சிரிப்பில்,
எம் நினைவு சுமைகளை புறந்தள்ளி விடுகிறாய்!
முகத்தை வருடும் தளிர் கரங்களால்
கவலைகளை கரைத்து விடுகிறாய்!
தலைவலிகள் தலைமறைவாகின்றன!
கவி பாடும் உன் விழிகளே, கட்டளை ஆகின்றன!
மாற்றங்களை கொணர்வது தெய்வம் மட்டுமில்லை,
நீயும் தான்!!
No comments:
Post a Comment